அ. கோ. கஸ்தூரி ரங்கன் தலைமையில் செயல்படும் ‘தமிழர் தன்மானப் பேரவை’ என்னும் அமைப்பு, கருப்பு கொடியில் சிவப்பு நட்சத்திரம் பதித்த தங்கள் அமைப்பின் கொடியை, பெரியார் திராவிடர் கழகம் களவாடி விட்டதாகக் கூறி வருகின்றனர்.  இதனை பெரியார் திராவிடர் கழகத்துக்கு, தோழமையுடன் தெரிவித்தும் அவர்கள் திருத்திக் கொள்ளாததற்கு கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

‘மக்கள் உரிமைக் கழகம்’ என்பது ‘தமிழ் நாடு மார்க்சிய லெனினியக் கட்சி’ யின் மக்கள் திரள் அமைப்பு.  இதே பெயரில், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கமும் ஒரு மக்கள் திரள் அமைப்பை தொடங்கியுள்ளது.  இதனை த.ஒ.வி.இயக்கத்தின் தலைமைக்கு கடித வாயிலாகவும், தொலைப்பேசியிலும் தெரிவித்தும் திருத்திக் கொள்ளாததைக் கண்டித்து த.நா.மா.லெ.கட்சி ஒரு துண்டறிக்கை வெளியிட்டுள்ளது. 

மாயாவதி, கன்ஷிராமுக்கு ‘பாரத ரத்னா’ விருது அளிக்கப்பட வேண்டும் என்று கேட்கிறாராம்.  அத்வானி, வாஜ்பாயிக்கு, ‘பாரத ரத்னா’ விருது அளிக்கப்பட வேண்டும் என்று கேட்கிறாராம்.  அதனால், சோனியா, நரசிம்மராவுக்கு ‘பாரத ரத்னா’ விருது அளிக்கப்பட வேண்டும் என்று கேட்க வேண்டுமாம்.  ஆனந்த விகடனில், அதன் பதிப்பாளர் சீனிவாசன் எழுதுகிறார். நரசிம்மராவ் மகனுக்கு நடிகை நக்மாவைக் கூட்டி கொடுத்து காரியம் சாதித்தார்களே!  அதற்காக நரசிம்மராவின் மகனுக்கோ, நடிகை நக்மாவுக்கோ கூட ‘பாரத ரத்னா’ விருது வழங்கலாம்.  ஆனந்த விகடன், அதற்காக கையெழுத்து இயக்கம் தொடங்கலாம்.  பார்ப்பான் எவ்வளவு தான் அயோக்கியனாய் இருந்தாலும் அவனைத் தூக்கிக் கொண்டாடுவது தான் பத்திரிக்கையுலகப் பார்ப்பனர்களின் வழக்கம்.  எனக்குத் தெரிந்தவரை, நடிகை சொர்னமால்யாவின் ஆசை நாயகன் ‘சங்கராச்சாரி’ தான் ‘பாரத ரத்னா’ விருதுக்கு மிகவும் தகுதியானவன்.

ஜெயலலிதா பா.ஜ.க கூட்டணியில் சேர முடிவு செய்து விட்டார். வைகோ, பா.ஜ.கவுடன் கூட்டணி சேர்வதா? அல்லது திருநாவுக்கரசைப் போல், தன் கட்சியையே பா.ஜ.கவுடன் சேர்ப்பதா என தன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாகவே, அவரது கட்சி வார இதழில், அருணகிரி என்பவர் ‘இந்திய அரசியல் கட்சிகள்’ என்ற பெயரில் தொடர் கட்டுரை எழுதி வருகிறார். சங்கொலி 11-01- 2008 இதழில், பா.ஜ.கவின் பழைய வடிவமான ‘பாரதிய ஜன சங்கத்தைப்’ பற்றி எழுதியுள்ளார். அதில் தவறில்லை. இக்கட்டுரையில் ஓரிடத்தில் கூட இக்கட்சியைப் பற்றியோ, அதன் கொள்கைகளைப் பற்றியோ விமர்சனம் இல்லை. ஆனால், காங்கிரஸுக்கு மாற்று என்ற தோரணையில் பாரதிய ஜன சங்கத்தையும், அதன் தலைவர்களையும் பாராட்டி எழுதியுள்ளார். வைகோ மாமா, பிழைப்புக்காக எதுவும் செய்வாரோ?

‘திராவிடன்’ என்ற சொல்லைக் கேட்டாலே முகம் சுளிக்கும் மணியரசன்,  மலேசியத் தமிழர்கள் இந்து அடையாளத்துடன் போராடுவதை நியாயப் படுத்தி, தமிழர் கண்ணோட்டம் இதழில் ஆசிரியவுரை எழுதியுள்ளார். இவர்களுக்கு சங்பரிவார் அமைப்புகளுடன் கள்ள உறவு இருக்கக் கூடும். அதனால் தான் சேதுப்பாலத்தை எதிர்க்கிறார்கள்.

 இணையத்தில் உலவும் இந்து வெறி எழுத்தாளர்கள்

1. நேசக்குமார்
2. மலர்மன்னன்
3. அரவிந்த நீலகண்டன்
4. டோண்டு ராகவன்
5. மாயவரத்தான்

Posted by: ஏகலைவன் | டிசம்பர் 16, 2007

அ. மார்க்ஸுக்கு பட்டம் தரும் அனுமான்

குமுதம் வார இதழுக்குத் தான் அளித்த பேட்டியில் எழுத்தாளர் அ. மார்க்ஸ், மொழிவழி தேசியத்தை எதிர்ப்பதாகக் கூறிவிட்டாராம்.  அதற்காக, அவரை இந்திய அரசுக்கு சேவை செய்யும் கோயபல்ஸாகச் சித்தரித்து பெ. மணியரசன், தமிழர் கண்ணோட்டம் இதழில் கட்டுரை எழுதியுள்ளார்.  தசரத ராமனை தமிழ் ராமனாகத் திரித்து எழுதிய இந்த சங்கப் பரிவாரக் கைக்கூலி, இந்து வெறியை கருத்தியல் களத்தில் எதிர்த்துப் போராடும் எழுத்துப் போராளி அ. மார்க்ஸை, ‘கோயபல்ஸ்’ எனக் கூறுவது சிரிப்பை வரவழைக்கிறது. பெ. மணியரசனுக்கு இந்த வலைப்பதிவு ‘அனுமான்’ என்ற விருதை பெருமையுடன் வழங்குகிறது.

உலகத் தமிழர் பேரமைப்பை நடத்திய பழ. நெடுமாறன்,  சில ஆண்டுகளுக்கு முன் தான் நடத்திய மாநாட்டுக்கு, திராவிட இயக்கத்தில் பா.ஜ.கவின் கையாளாக இருந்த முதியவர் ராஜாராமை, தலைமை தாங்கச் செய்தார்.  இப்போது திருப்பூரில் நடந்த மாநாட்டில், ஆர்.எஸ்.எஸ் காரரான பொள்ளாச்சி மகாலிங்கத்துக்கு ‘உலகப் பெருந்தமிழர்’ விருது கொடுத்துள்ளார்.

 தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலாளர் பெ. மணியரசன், தமிழர் கண்ணோட்டம் இதழில், ராமனுக்கு ஆதரவாக எழுதியுள்ளார்.  அக்கட்சியில் இருந்து வெளியேறி, ‘தமிழ் தேச மார்க்சியக் கட்சி’  நடத்தும் இராசேந்திரசோழன், ‘மண்மொழி’ இதழில், இந்து மதத்தில் ஜனநாயகம் நிலவுவதாக ஒரு புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளார்.  தலித்கள், இந்து மத்ததில் இருந்து கொண்டே போராட வேண்டுமே தவிர மதம் மாறக்கூடாது என அறிவுரை கூறியுள்ளார்.  இவர் தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சியில் இருந்தே போராடமல் ஏன் தனிக் கட்சி தொடங்கினார்? இந்திய அமைப்பில் இருந்தே போராடமல் எதற்காக சுய நிர்ணய உரிமை கோருகிறது இவரது கட்சி?    

வகைகள்